Thursday, January 26, 2012

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 50)ஜோதிவிருட்சம்



அன்புள்ள பதிவு வாசகர்களே,
இந்தப் பதிவில் சித்தர்களின் அபூர்வ மூலிகைகளில் ஒன்றான ஜோதி விருட்சத்தைப் பற்றி பார்ப்போம்.எங்கே நிம்மதி!!!!எங்கே நிம்மதி!!! என்றலையும் மனிதர்களுக்கு உதவும் ஒரு விடயம்தான் இது.


கோரக்கர் மலை வாகடம் என்ற நூல் மலையில் என்னென்ன மூலிகைகள் எங்கெங்கு உள்ளன என்பதையும்,அவற்றின் பயன் என்ன என்பதையும் விவரிக்கும் நூல்.மேலே கொடுத்துள்ள படம், கோரக்கர் மலை வாகடம்,என்னும் அந்த நூலில் ஜோதி விருட்சம் பற்றி உள்ள கட்டுரையின் நகல்.


இந்த மரம் மின்மினிப் பூச்சிகள் ஒட்டினாற்போல சோதி மயமாய்க் காணப்படும்.இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு அறியும் இறியும் கிலியும் கமு காயா நம!!! என்று ஆயிரத்தெட்டு முறை சொல்லி நமது பெயரையும் நட்சத்திரத்தையும் ஒரு மஞ்சள் தாளில் எழுதி,மஞ்சள் நூலில் கட்டி,ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவது போல மரத்தை இடப்புறம் வைத்து காப்பை கட்டி,பொங்கல் வைத்து,தூப தீபம் கொடுத்து அதன் மேற்பரணியைச் சீவிவிட்டு உட்பட்டையை கொண்டு வந்து குழித்தைலம் இறக்கி புத்தகத்தில் கண்ட வகையில் சாப்பிட தேகம் காய சித்தியாகும்.மலமும்,சலமும் பேதிக்கும். (என்றால் அதுவே மீண்டும்,தானே உள்ளுறுப்புகளால் மறு சுழற்சியாக்கப்படும்.)


மரத்தின் பாலைத் துணியிலூட்டி,அதைத் திரியாய்த் திரித்து, விளக்கெண்ணை ஊற்றப்பட்ட விளக்கில் இட்டு,விளக்கை ஏற்றி, மேலே புது ஓட்டை மேலே கவிழ்த்து,அதில் படியும் மையை பஞ்ச லோகத்திலும் இந்த மையைத் தடவி புடமிட பத்து வயதுள்ள தங்கமாகும்.


கீழே அந்த மரத்தின் காய்களைப் படத்தில் கொடுத்துள்ளேன்.அந்த மரத்தின் 108 விதைகளைக் கோர்த்து மாலையாக்கி,அந்த மாலையினால் மந்திரங்கள் செபித்து வர மந்திரங்கள் எல்லாம் சித்தியாகும்.மேலும் காய சித்தியுண்டாகும்.மனம் அமைதி அடையும்.இந்தப் பழத்தையுண்ண எந்த நஞ்சும்(இடுமருந்தின் நஞ்சும் முறியும்).சிறு குழந்தைகளுக்கு கைகளில் கட்ட சீரடிக்காது. சாதாரணமாக நோய்கள் தாக்காது.


கீழே அந்த மரத்தின் விதைகள் மாலையாகக் கோர்க்கப்பட்டதும்.பழங்களின் படமும்.பழங்கள் கொன்றைப் பழங்களைப் போல இருக்கும் என்பதை கோரக்கர் மலை வாகடத்தில் வருணித்திருப்பதை காணுங்கள்.


எனது நண்பர் திரு கண்ணன் அவர்கள் பழங்குடியினர் மற்றும் மலையிலுள்ள ஆதி வாசிகள் என்னும் பழங்குடியினர்களுக்கு (பளியர் என்றும் அழைப்பார்கள்) நல்வாழ்வு அளிக்கும் முகமாக அவர்களை வைத்து சதுரகிரி மலையில் வளரும் மூலிகைகளினால் மருந்துகள் தயாரித்து சதுரகிரி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் சேவை மனப்பான்மையுடன் செய்து, பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.


அவரிடம் மேற்படி விதைகள் கிடைக்கும்.வேண்டிய நபர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். இதை கழுத்தில் அணிந்தாலே ஞான வாசல் திறக்கும்.


அவரின் அலைபேசி எண்கள்,
+919894912594
+919943205566


அவரது முகவரி:-
பெ.கண்ணன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.


அவரிடம் தற்போது ஆஸ்துமா, இளைப்பு, ஈளை, காசம் போன்ற நோய்களுக்கு,மூலிகைகள் மற்றும் அபூர்வ மருந்துப் பொருட்கள் சேர்ந்த மருந்து கிடைக்கும்.டெரிப்லின் ஊசிகள், சல்பூட்டமால் பஃப் போன்றவைகள் உபயோகித்து ஈரலையும், மண்ணீரலையும், சிறுநீரகத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கும் அன்பர்கள் தயவு செய்து அவற்றை விட்டு விட்டு இந்த மருந்தைப் பயன்படுத்தி பயனுறுமாறு இதை தெரிவிக்கிறேன்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

சித்தர்களின் ரசமணி ரகசியங்கள்


எனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே!
இவர்களின் பரம்பரையில் வந்ததாலோ என்னவோ இந்த சித்த வைத்திய முறைகளை எனது மாமா சற்குரு அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயா அவர்களின் திருக்கடாட்சத்தால் மூலிகைகள் ,மருந்துகள் பற்றிய விவரங்களும் அவைகளை முடிக்கும் விதம் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு.நான் எனது தாத்தாவின் ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்த்து அதில் வர்மம் பற்றிய குறிப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதை கராத்தே குங்பூ போன்று அதை அடுத்தவர்களை உதைக்க பயன்படுத்தலாம் என்று எண்ணி,அதை முழுமையாக கற்றுக் கொடுங்கள் என்றுதான்,முதன்முதலில் எனது மாமா அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயாவைக் கேட்டேன். ஆனால் அவரோ கைநாடி பார்க்க தெரியாமல் வர்மம் கற்றுக் கொண்டால் பயன் இல்லை என்று கூறி என்னை,வேறு பாதையில் திருப்பி கொஞ்சம் ,கொஞ்சமாக நாடி பார்க்க கற்க வைத்து,வைத்தியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்க வைத்தார்.

பின்னாளில் நான் வர்மம் பற்றி அறிந்து கொண்ட பின்( எனக்கு இரு குழந்தைகள் பிறந்த பின் நான் இனி யாரையும் கைநீட்டி அடிக்க மாட்டேன் என்று தெளிவாய்த் தெரிந்த பின்னரே கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் கூடிய சத்தியத்தையும் வாங்கிக் கொண்ட பின்னரே எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
1) உயிருக்கு ஆபத்தான சமயந் தவிர வேறு சமயங்களில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்கக் கூடாது, என்றும்
2)கற்றுக்கொடுத்த குருநாதருக்கு எதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
3) கற்றுக்கொடுத்த குருநாதரின் வாரிசுகளுக்குஎதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
4) கற்றுக்கொடுத்த குருநாதர் உயிருடன் இருக்கும் வரை ,இதை யாருக்கும் நான் கற்றுக் கொடுக்கக் கூடாது ,என்றும்.
 5)உயிருக்கு ஆபத்தான சமயத்தில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்க நேர்ந்தாலும் அவர்களை அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும், என்றும்.வர்மத் தாக்குதலுக்கு இயற்கையாலோ செயற்கையாலோ, ஆளாகி இருக்கும் ஒருவனை இறக்கும்படி விட்டுவிடக்கூடாதுஅவர்களையும் அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும்.என்றும்.
6)வர்மம் என்றாலே கர்மம் .அவை இறைவன் போட்டு வைத்த மர்ம முடிச்சுக்கள், எனவே எந்த வர்மத்தையாவது வர்மம் கற்றவன் தாக்குதலுக்குப் பயன்படுத்தினால் அதே வர்மத்தால் அவனுக்கு மரணம் நேரும், என்றும்.
7)வர்மத்தின் நல்ல பிரயோகங்களை அவத்தைப் படுபவர்களுக்கு பொருள் வாங்காது பிரயோகம் செய்ய வேண்டும் ,என்றும்.
பால் வைத்து சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுத்தார்கள்.

நான் எதற்காக வர்மம் கற்க நினைத்தேனோ அந்த நோக்கம் பின்னாளில் , மறைந்து துன்பப்படும் நோயாளிகளுக்கான வைத்தியத்திற்கான பிரயோகமாக அது மாறியது.

சரி இப்போது ரசமணி ,ரச மணி என்று சொல்கிறார்களே அது எது,எதற்கெல்லாம் பயன் பெறும்.எப்படி செய்வது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் எனது தாத்தாவின் ஏட்டுப்பிரதியில் இருப்பதை அப்படியே ஒளி நகலாகத் தருகிறேன்.



இந்த ஏட்டுப் பிரதி எழுத்துக்கள் புரியாது எனபதால் அதில் கொடுத்துள்ள விஷயங்களை அப்படியே தருகிறேன்.கருவூமத்தை வேரைக் கொண்டு வந்து
பெரிய துவாரம் போட்டு கால் பலம் வாலை ரசம் (ஒரு பலம் என்பது 35 கிராம்)
விட்டு (அதில் குடைந்து எடுத்த) நடு வேரைக் கொண்டு மூடி ஏழு சீலை மண் செய்து(ஒரு சீலை மண் என்பது பருத்திக் காடாத் துணியில் களிமண் பூசி அதை மேற்படி வேரின் மேல் சுற்ற வேண்டும் ,இப்படி ஏழு தடவை சுற்ற வேண்டும்) கோழிப் புடம்போட தம்பனமாகும்(தம்பனம் என்றால் ஓடாமல் ரசம் கெட்டிப்படுதல்).(கோழி உட்கார்ந்து இருந்தால்  எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு உயரம் மாட்டுச் சாண எரு அடுக்கி புடமிடுதல்).அப்படி மூணு புடமிட கட்டிப்படும்.
அதை கையில் எடுத்து முள் முருங்கையிலை இரண்டு எடுத்து,இரண்டு பணவெடை மயில் துத்தம் பொடிசெய்து இலைக்குள் வைத்து பொட்டலம் கட்டி புதுச்சட்டியில் (புது மண்சட்டி) மேலே கட்டின ரசத்தை விட்டு கொதிக்கிற தண்ணீர் விட்டு பொட்டணங்கொண்டு நாலு நாழிகை எரித்தெடுக்க ரசமணியாகும்.அதை ஆறும் முன்பு ஊசியால் குத்தி கோர்த்து எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

எனக்கு தங்கள் விமரிசனங்களையோ,தங்கள் கருத்துக்களையோ எனக்குத் தெரிவித்தால், நன்றி நண்பர்களே!
பின்னொரு சமயம் வேறோர் விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்

சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 2


சென்ற வலைப்பூ வெளியீட்டில் கொடுத்துள்ள இரச மணியை எந்த விதமான நஞ்சையும் முறிக்க உபயோகிக்கலாம்.எந்தக் கடியாக இருந்தாலும் கடிவாயில் இரசமணியை வைக்க ஒட்டிக் கொள்ளும் .நஞ்சை உறிஞ்சிய பின் பிறகு இரசமணி கீழே விழும் அதை கையால் தொடாமல் ஒரு பற்றுக் குறடால் எடுத்து பாலில் போட அது நீலநிறமாக மாறும்.

பிறகு மீண்டும் கடிவாயில் இரசமணியை வைக்க ஒட்டிக் கொள்ளும்  .நஞ்சை உறிஞ்சிய பின் பிறகு இரசமணி கீழே விழும் அதை கையால் தொடாமல் ஒரு பற்றுக் குறடால் எடுத்து வேறு புதிய பாலில் போட அது நீலநிறமாக மாறும்.இதே போல் சில முறை செய்ய கடைசி முறையில் கடிவாயில் எப்போது ரச மணி ஒட்டாமல் இருக்கிறதோ அப்போது நஞ்சு முழுவதும் நீங்கிவிட்டது என்று பொருள்.

நீல நிற்மாக மாறிய பால் நஞ்சு நிறைந்தது ,எனவே அதை கவனமாக குழி தோண்டி அதில் ஊற்றி மூடிவிடவும்.பிறகு அவருக்கு சுக்குக் கஷாயத்தில் சிறுதும்பை சேர்த்து கொதிக்க வைத்துக் கொடுக்க மீதி ஏதேனும் விஷம் இருந்தாலும் அதுவும் முறிந்துவிடும்

சித்தர்கள் ரசமணியை பலவிதமாக வர்ணிக்கிறார்கள்.பலவிதமான ரசமணியைத் தயாரிக்கும் விதம் பற்றியும் விவரிக்கிறார்கள்.முதலில் சாதாரண மனிதர்கள் நினைப்பது போல் நானும் சித்தர்கள் சொல்லும் விஷயங்கள் சாத்தியம் இல்லாதது ,நம்ம விஞ்ஞானிகள் பாணியில் சொல்வதானால் டுபாக்கூர் என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் சித்தர்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை பரீட்சை செய்து பார்த்தவுடனே எனது அபிப்பிராயம் முழுவதும் மாறி எனது வாழ்க்கைப்பாதையே சித்தர்கள் பாதையில் மாறிவிட்டது.இப்போது இரசமணியின் வகைகளைப் பார்ப்போம்.

சப்தவேதி இரசமணி என்பது அதனிடம் இருந்து வரும் சப்தத்தால் சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தங்கமாக்கும்.என்னங்க சப்தம் தங்கமாக்குமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

" BIG BANG THEORY "  என்பது ஒரு பெருவெடிப்பினால்தான் இந்த கேலக்ஸி என்ற அண்ட பேரண்டங்களே உண்டானது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.அந்த அண்ட பேரண்டங்களையும் தோற்றியது 'ஓம்காரம்' என்று சித்தர்கள் சாத்திரம் கூறுகிறது.இதோ உங்களுக்காக ஒரு யூ ட்யூப் வீடியோ,    


சப்தம் அண்ட பேரண்டங்களையே உண்டாக்கியது என்றால் ,கேவலம் தங்கத்தையா உருவாக்காது? இந்த சப்த வேதி இரசமணி அதன் சப்தம் கேட்குமிடம் வரை உள்ள பொருட்கள் அனைத்தும் தங்கமாகும்.

இது போல் ஸ்பரிச வேதி இரசமணி எந்தப் பொருளைத் தொட்டாலும் அந்தப் பொருள் தங்கமாகும்.
கவுனமணி வாயில் ஒதுக்கி அது வாயில் இருக்கும் போது ஊரும் எச்சிலை விழுங்கி வர உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் ஒதாமல் உணரலாம்.கவுனமணி பற்றி சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி அவரது வலைப்பூவில் விவரமாக கொடுத்துள்ளதால் இங்கு அதை விவரிக்காமல் விடுகிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்

சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3


எனக்கு நீங்கள் சொன்ன மாதிரி புடம் போட எல்லாம் முடியாது.எளிதான வழி சொல்லுங்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு எளிதான வழி இதோ.



பெரும் பூசணிக்காய் கொண்டு வந்து அதில் ஒரு இடத்தை சிறு சதுரத்துண்டு எடுத்து (மீண்டும் அதை மீண்டும் அடைப்பது போல் இருக்க வேண்டும்) அப்பிரகம் பொடி செய்து வஸ்திரகாயம் (நல்ல சல்லாத் துணியினால்(சிறு கண் கொண்ட ) சலித்து எடுத்து ) செய்த பொடியை நிரம்ப அடைத்து அதற்குள் உலை ரசம் விட்டு முன்னர் எடுத்த வில்லையை வைத்து ஏழு சீலை மண் செய்து உறிக்குள் வைத்து அடுப்புக்கு மேலே (௪௰௫(45)) நாற்பத்து ஐந்து நாள் வைத்திருந்து (௪௰௬(46)) நாற்பத்து ஆறாவது நாள் கீழே ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு ஊசியினால் ஷ காயின் (அந்தக் காயின்) அடியில் துவாரம் செய்தால் ரசம் விழும்.

இந்த ரசத்தையே ரச மணி கட்ட உபயோகிக்க வேண்டும்.இந்த ரசம் (2)இரண்டு விராகனிடை ஒரு மண்சட்டியில் விட்டு சரக் கொன்றைப்பூ ரசம் சுருக்குக் கொடுக்க ( ரசத்தை சட்டியில் விட்டு சட்டி சூடாகும் போது சரக் கொன்றைப் பூச் சாறு சிறிது சிறிதாக விடுவதையே சுருக்கு என்பார்கள் ) ரசம் மணியாகும்.சட்டியை சூடாக்கும் போது அடுப்பை தீபாக்கினி எரிவு எரிக்க வேண்டும்.( அடுப்பை தீபாக்கினி எரிவு எரித்தல் என்றால் தீபம் எப்படி எரியுமோ அப்படி எரிக்க வேண்டும் )
மீண்டும் ஒரு சுவாரசியமான மடலுடன் தங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி
என்றென்றும் அன்புடன்
சாமீ அழகப்பன்

மனப் பெரு வெளி

மனப் பெருவெளி என்பது நம் மனங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ள '''உலகப் பெரு மனமே''' ஆகும்.இந்த மனப் பெருவெளியில் நம் எண்ணம், சொல் ,செயல் இவற்றால் செய்யும் காரியங்களின் அழுத்தம் பதிவாகிறது.நாம் செய்யும் காரியங்களின் நேர் விளைவுகளையும்(POSITIVE ACTION), எதிர் விளைவுகளையும்(NEGATIVE ACTION) தீர்மானிப்பது இந்த மனப் பெருவெளியே.

மெஸ்மரிசம்(MESMERISM),ஹிப்னாடிசம்(HYPNOTISM),ஏவல் பில்லி சூனியம் என்பவற்றை(PSYCHIC ATTACKS)செயல்படுத்தவும் இதுவே தொடர்புக் கருவியாக வேலை செய்கிறது . ஆனால் மனப் பெருவெளி இந்தத் தொடர்பை மட்டுமல்லாமல் இந்தத் தொடர்பால்,விளைவிக்கப்படும் விளைவுகளையும் பதிவு செய்கிறது,அந்த விளைவுகளால் உண்டாகும் பதில் விளைவுகளையும் உண்டாக்குகிறது (EVERY ACTION HAS AND EQUIL AND OPPOSITE REACTION-NEWTONS THIRD LAW,கர்ம(வினை செயல் வகை என்று திருக்குறளில் கூறப்பட்டுள்ளவை இதுவே) வினைகளின் பதில் கர்மங்களை உண்டாக்குவது . மெஸ்மரிசம்(MESMERISM) , ஹிப்னாடிசம் (HYPNOTISM) , போன்றவற்றை நல்வழிகளுக்கு உபயோகிக்கும் போது நேர் விளைவுகளையும் (POSITIVE ACTION) , தீய வழிகளுக்கு உபயோகிக்கும் போது எதிர் விளைவுகளையும் ( NEGATIVE ACTION ), உண்டாக்குகிறது.

இதையே

 '''கணியன் பூங்குன்றனாரின்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா'''

'''யாதும் ஊரே யாவரும் கேளிர்'''  என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்கப்பட்டுள்ளது.'தீதும் நன்றும் பிறர் தர வாரா'என்பதற்குப் பொருள் நமக்கு வரக் கூடிய நல்ல விஷயங்களும் ,கெட்டவிஷயங்களும் மற்றவர் நமக்குச் செய்பவை அல்ல.நாமே நமக்கு விளைவித்துக் கொள்வது என்பவை இந்த தமிழ் சித்தர்களின் அக உளவியலின் அடிப்படையிலேயே கூறப்பட்டவை. அக உளவியலில் நம் தமிழ் மரபுச் சித்தர் பெரு மக்களின் பங்கு மகத்தானது.
சித்தர் சிவ வாக்கியர்
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா!
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா! 
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

இந்திய ஆயுர் வேத யோக சாஸ்திரம் இதை நன்கு விளக்குகிறது.செய்வினை,ஏவல் பில்லி சூனியம் என்பவற்றை(PSYCHIC ATTACKS),எண்ண விதைப்பு (MIND SEEDING) என்பவற்றை நம் எண்ணம், சொல் ,செயல் இவற்றால் அழுத்தம் கொடுக்க  விளைகிறது .ஆனால் இவை செய்யும் போது அதன் பலன்களையும்   மனப் பெருவெளி விளைவிக்கிறது என்பவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அக மன உளவியல்(PARA PSYCHOLOGY),MIND SEEDING என்பவை இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே.
நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்

Thanks to http://machamuni.blogspot.com

சித்த குளிகை இரசமணி

சித்த குளிகை இரசமணி 2

பல சித்துக்களுக்கு உதவும் சித்த ரச குளிகை செய்யும் முறையை இங்கு விவரிக்கிறேன்.








காக்காச் சிப்பியும்(காக்கையின் மலமும்(பிய்யும்))  வெள்ளாட்டுப் புளுக்கையும் சமமாய்ப் பொடித்து எடுத்துக் கொண்டு புதுச் சட்டியில் கீழும் மேலுமாக வைத்து மத்தியில் ஒரு பலம் (35 கிராம்) ஒரு விரல் கடை  மணலைப் பரப்பி அதன் மேலே புது ஓடு வைத்து அதன் மேலே ஒரு விரல் கடை மணலைப் பரப்பி அதன் பேரில் பெரிதான ஒரு எருவில் , புடம் போட்டு, குளிர்ந்து ஆறின பிற்பாடு அதிலிருந்த (எரிந்து போன காக்காச் சிப்பியும்,வெள்ளாட்டுப் புளுக்கையும் )எரிந்து போன பொடியை கொட்டிவிட்டு மேலே சொன்ன பிரகாரமே இரண்டு எருவில் புடம் போடவும்.

இந்தப் பிரகாரமாக புடத்திற்கு புடம் ஒவ்வொரு எருவு சாஸ்தியாய் புடம் போட்டு( ௪௰௪(44)) நாற்பத்தி ஐந்தாவது (௪௰௫(45)) எருவில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது.

இது ரச மணி ஆகும்.இதை திரும்ப ௰௮ ( 108 ) தடவை புடம் போட்டால் சித்த குளிகை ஆகும்.



1
2
3
4
5
6
7
8
9
10
100
1000











  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • - 2 -
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௱ = 100
  • ௨௱ = 200
  • ௩௱ = 300
  • ௱௫௰௬ = 156
  • ௲ = 1000
  • ௲௧ = 1001
  • ௲௪௰ = 1040
  • ௮௲ = 8000
  • ௰௲ = 10,000
  • ௭௰௲ = 70,000
  • ௯௰௲ = 90,000
  • ௱௲ = 100,000 (lakh)
  • ௮௱௲ = 800,000
  • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
  • ௯௰௱௲ = 9,000,000
  • ௱௱௲ = 10,000,000 (crore)
  • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
  • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
  • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
  • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

[தொகு]








இது பல சித்துக்களுக்கு உதவும். சித்த ரச குளிகையை அவ்வளவு எளிதாக எந்த குருநாதரும் கொடுக்க மாட்டார்கள்.12 வருடம் ( திட சித்தத்துடன் பன்னிரண்டு வருடம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்து தன்னிடம் விசுவாசத்துடன் நடந்து கொள்ளும் சீடனுக்கு மாத்திரம் எந்த குருநாதரும் கற்றுக் கொடுப்பார்கள்)
ஆனால் நான் இங்கே அதை சர்வ சாதாரணமாகக் கொடுத்து இருப்பதனால், இதை சாதாரணமாக எண்ண வேண்டாம்.

எந்த ரகசியமும் என்னோடு போகக் கூடாது.எனவேதான் இந்த வலைப் பூவில் இவ்வளவு ரகசியமான விஷயத்தையும் என்னோடு வைத்துக் கொள்ளாமல் இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறேன்.


நன்றி
இப்படிக்கு
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
 Thanks to http://machamuni.blogspot.com